இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருத்தலமாகும்.இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு மாரியம்மன் ஆகும்.மூலவர் மாரியம்மன் என்பதால் செவ்வாய் கிழமை,வெள்ளிகிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். ஆடி 18 மற்றும் ஆடி 28 போன்ற தினங்கள் இத்திருக்கோயிலின் சிறப்பான தினங்களாகும்.ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 3 ம் செவ்வாய் அன்று இத்திருக்கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறும்.