புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை வட்டம், மாலையீடு கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மாமன்னர்களில் மாமன்னர் திருமிகு.விஜயரெகுநாத தொண்டைமான் மன்னர் 1807ல் இறந்தவுடன் பதிவிரதையான அவரது மனைவி ராணிமாது ஸ்ரீமதி ஆயிஅம்மாள் தனது கணவரின் பிரிவு தாங்காமல் தானும் உடன்கட்டை ஏற எண்ணி பலர் தடுத்தும் கேளாமல் தனது இரு சிறு இளவரசர்களையும் உறவினரிடம் விட்டுவிட்டு தனது கணவரின் எரியும் சிதையில் தானும் விழுந்து உயிர்நீத்தார். இராணியார் உயீர்நீத்த இடத்தில் மாலையிட்டு வணங்கி வந்தனர். உடன்கட்டை ஏறிய இடம் மாலையீடு என அழைக்கப்படுகிறது.