இத்திருக்கோயில் ஊருக்கு தென்புறத்நில 3.2 கி. மீ தொலைவில் தென்னந்தோப்பின நடுவில் அமைந்துள்ளது. இத்தல இறைவனுக்கு ஏக்கர் பரமேசுவரர் என்று வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் இராஜ கேசரி வர்மனுடைய 12ஆம் ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு காவிரி வெள்ளத்தால் பாழாக்கப்பட்ட நிலங்களை சீர்திருந்தம் செய்து விளைநிலமாக்கி இத்திருக்கோயிலின் அர்ச்சனை உபயோகத்திற்கும் விளக்கு எரிப்பதற்கும் ஊர் சபையார் வழங்கிய செய்தியே பல கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இத்திருக்கோயிலில் பராந்தகன் காலத்திய கல்வெட்டுகளில் இருந்து சதுரமான கருவரை உடையதும் முதல் பராந்தக காலத்தில் நிறுவிய துவார பாலகர் சிலைகள் உள்ளது. பழைய தட்சிணாமூர்த்தி பழைய விக்கிரகம் சிதைந்ந நிலையில் மா மரத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் பிச்சாடனர். ...