சென்னை மாநகரில் அண்ணாசாலையிலிருந்த எழும்பூர்செல்லும் வழியில் ஆதித்தனார் சாலையில் இடது புறம்இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, கூவம் என்றழைக்கப்படும் நதியானது விருத்த க்ஷீர நிதி என்று அழைக்கப்பட்டது அந்த காலத்தில் விருத்த க்ஷீர நதிக்கரை ஆடுமாடுகள் மேயும் பசும்புல் தரையாகவும் நிலவெளியாகவும் இருந்தது. ஒரு சமயம் பசுவானது தனது மடியில் இருந்து பாலை தானாகவே ஒரு புதரில் மேல் பொழிந்து வருவதைக் கண்ட இப்பகுதிவாழ் மக்கள்அவ்விடத்திற்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் பசு புதருக்குள்ளே ஒரு சுயம்பு லிங்க மூர்த்தியில் மேல் பாலை பொழிந்து வந்துள்ளதை அறிந்தார்கள். எனவே சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த மூர்த்திக்கு அவ்விடத்திலேயே ஒரு திருக்கோயில் எழுப்ப விழைந்துதிருக்கோயிலும் எழுப்பினார்கள்.