அருள்மிகு அபிராமி அம்மாள் உடனுறை அபராதரட்சகர் திருக்கோயில் கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து 3 கி.மீ.தொலைவில் கொல்லாபுரம் அமைந்துள்ளது. முதல் இராஜேந்திர சோழனுடைய இரண்டாம் புதல்வனாகிய இரண்டாம் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி என்று இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு கொல்லாபுரத்து ஜயஸ்தம்பம் நாட்டிய பேராற்றங்கரைக் கொப்பத்து ஆகவல்லனை அஞ்சுவித்து அவன் ஆளையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் கைக்கொண்டு விஜயாபியாகம் பண்ணிவீர சீறுகாசத்து வீற்றிருந்தருளின கோப்பரகேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழ தேவர் என்று கூறுகின்றது.