திருக்கோயிலானது நன்செய் நிலங்களின் மய்யம் பகுதியில் இயற்கை எழில் நிறைந்த இடத்தில் வடக்கு நோக்கி அமையப் பெற்ற சன்னதியில் ஆங்காரரூபமாக காவல் தெய்வமாக அன்னை வீற்றிருக்கிறார். சுற்றுப்புற கிராம மக்களின் குலதெய்வமாகவும் இருந்து வருகிறாள்.இப்பகுதி மக்கள் எந்த ஒரு நல்லகாரியம் செய்தாலும் அம்மனின் உத்தரவினை பெற்றே செய்து வருகின்றனர்