சென்னை 600 049, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு நோக்கி 2 நிமிட தொலைவிலும், வில்லிவாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட தொலைவிலும் அருள்மிகு சொர்ணாம்பிகை அம்மன் உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பரமசிவனுக்கும் பார்வதி தேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைபெற்ற போது, தேவர்களும், சித்தர்களும், யோகிகள் மற்றும் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது வடநாடு அமிழ்ந்து தென்னாடு உயர்ந்தது. அதனை சமன்படுத்த அகத்திய பெருமானை பரமசிவன் தென்னாட்டுக்கு அனுப்பினார். அகத்திய பெருமான் தென்னாட்டை நோக்கி வரும் வழியில் தற்போது வில்லிவாக்கம் என வழங்கும் இவ்விடத்தில் வில்வலன், வாதாபி என்ற இரு கொடிய அரக்கர்கள் தவ முனிவர்களை அன்புடன் உபசரிப்பது போல் நடித்து மாயத்தால் வாதாபியை மாங்கனி உருவில் மாற்றி,...