மதுரை அண்ணாநகர் வாழ் மக்களும் மற்றெல்லா பொது மக்களும் வழிபடுவதற்கு ஏதுவாக ஒரு ஆலயம் கட்டுவதற்கு மதுரை சாத்தமங்கலம் அறிஞர் அண்ணாநகர் ஆலயக்குழு முயற்சியினால் தற்பொழுது சர்வேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் 21.11.1974 அன்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.கே.எஸ்.நரசிம்மன் அவர்களால் அடிக்கல் நாட்டி திருப்பணி தொடங்கப் பெற்றது. கும்பாபிஷேக விபரங்கள் பின்வருமாறு அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் 04.02.1976. சிவன் கோவில் மூர்த்திகள் சன்னதி 30.01.1980. பெருமாள் கோவில் மூர்த்திகள் சன்னதி 21.01.1983. நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் சன்னதி 05.02.1990. சரஸ்வதி சன்னதி 16.06.1999. கிழக்கு இராஜகோபுரம் 23.07.1997. கோவில் சன்னதிகள் முழுவதும் கும்பாபிஷேகம் 23.07.1997. மேற்கு இராஜகோபுரம் 06.07.1998. சிவன் மற்றும் பெருமாள் சன்னதிகள் முழுவதும் ...