இத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி, திருமலை நாயக்கர் மன்னருக்கு பிரசன் னமாக காட்சியளித்ததால், பிரசன்ன வெங்கடாஜலபதி என அழைக்கப்படுகிறார். திருப் பதிக்கு சென்று வெங்கடா ஜலபதியை வழிபட முடியாதோர் இத்தலத்திற்கு வந்து பிரசன்ன வெங்கடாஜலபதியை வேண்டிட, பலன்கள் கிட்டும்.சித்ரா பவுர்ணமி திருவிழாவின் போது, தங்க குதிரையில் பவனி வரும் அழகர்,இக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் மாலை சாத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்பே ஆற்றில் இறஙகச் செல்வார்.