இத்திருக்கோயிலில் அமைத்துள்ள நூபுர கங்கை தீர்த்தமானது கங்கை நதியைப் போலவே புனிதமானதாகக் கருதப்படுகிறது, இது ஆண்டு முழுவதும் தண்ணீர் பாயும் ஒரு இயற்கை நீரூற்று ஆகும். இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். தீர்த்தத்தின் மேல் காவல் தெய்வமான இராக்காயி அம்மன் கோயில் உள்ளது. தொட்டியைச் சுற்றிலும் கல்தூண் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இது மாதாவி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.