இத்திருக்கோயில் திண்டுக்கல் நகரில் கீழ் திசையில் புகை வண்டி நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் முலவர் வரப்பரிசாதி என்று பக்தர்களால் போற்றி வழிப்படபடுகிறார். திருக்கோயிலின் வாயில் மேற்கு புறமாக அமைந்துள்ளது. தண்டபாணி சன்னதிக்கும் திருமண மண்டபத்திற்கும் நடுவில் சஞ்சீவி ஆஞ்சநேயர் எழுந்தரளியுள்ளார். முர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். தீராத நோய்களும் அவரை வழிபடுவதால் தீர்ந்து விடுவதை பக்தர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். வியாழக்கிழமை தோறும் வடை மாலை சாற்றியும் அர்ச்சனை செய்தும் வழிப்பட்டு வருகிறார்கள். நவகிரக சன்னதியும் உண்டு. கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரம் விநாயகர் பெருமானுக்கு மாதந்தோறும் ஒவ்வொரு சங்கட சதுர்த்தி...