தல வரலாறு திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, அம்பாத்துறையில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் பத்ரகாளியம்மன் கோயிலின் வரலாறு தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பின்னர் வந்த ஜமீன்தாரர்களுடன் இணைந்துள்ளதாக அறியப்படுகிறது. முன்னொரு காலத்தில் தற்போது நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஜம்புதுரைகோட்டை ஜமீன் பகுதியை ஆண்டு வந்தவர் ஜமீன்தார் பெஞ்சை மாக்கள நாயக்கர் இவருக்கு திருமணம் நடந்தது திருமண சடங்குகளில் ஒன்றாகிய வேட்டையாடுதலுக்கு அவர் புறப்பட்டார். காட்டில் வேட்டையாடி களைத்துப்போன ஜமீந்தார்,அங்கிருந்த தாமரை தடாகத்தில் தண்ணீர் பருக முயன்றார். அப்போது விஸ்வருபத்தில் ஓர் உருவம் அங்கு தோன்றியது தான் காளியின் சொரூபம் எனவும் அகோர பசியில் இருப்பதால் அவரை உண்டு பசியாறப் போவதாகவும் தெரிவித்தது. அதற்கு பதிலளித்த ஜமீன்தார் காளிமாதா தங்களுக்கு என்னை இரையாக தருவதில்...