அருள்மிகு மாரியம்மன், பகவதியம்மன் திருக்கோயில், கீழக்கோட்டை திண்டுக்கல் மதுரை மார்க்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மனாக பக்தர்கள் அனைவரும் நினைக்கின்றனர். ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவதனால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.