மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் பூம்பாறை என்ற சிற்றூரில் அருள்மிகு குழந்தைவேலப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள குழந்தைவேலப்பரை பழநித் தலப்புராணம், வராககிரி சீவத்தான சருக்கத்தில் எடுத்துரைக்கின்றது. பூம்பாறை திருத்தலத்தில் அருள்மிகு குழந்தைவேலப்பர் வீற்றிருக்கும் திருவருள் காட்சி பழநியம்பதியில் எழந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் திருக்கோலத்தோடு ஒப்புமை பெற்றதாகும். திருக்கோயில் நடை திறக்கப்படும் நேரம்.- காலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கால பூஜை .- காலை 9.00 மணி