தமிழ்நாடு, கேரளா எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஊருக்கு மேற்கிலுள்ள மலைச்சிகரம் ஒன்றுக்கு இராமக்கல் என்று பெயர். அதன் அடிவாரத்தில் தான் புகழ்மிக்க இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு இச்சிகரம் சார்ந்த சொரூபமான மனித முகச்சாயலாய் காட்சிதந்து, மனதை கவர்கிறது. இதற்கு பக்கத்தில் மேல்மலைப்பகுதியில் பசுமாட்டுத்தொழுவங்கள் அக்காலத்தில் ஏராளமாக இருந்துள்ளன. பால்மாடு வளர்ப்பவர்கள் மலையில் இருப்பிருந்து பசுக்களை மேய்த்து வருவார்கள். இரவி தொழுவத்தில் அடைத்து வைத்து காப்பார்கள். பசுக்களில் கறக்கும் பாலமுதை அவர்கள் உபயோகித்து, மிச்சத்தை அடிவாரத்திலுள்ள ஊருக்கு...