வெடால் சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1000 ஆண்டுகள் பழமையானது முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாகும். இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வழியே இறைவனின் பெயர் திருவடவாயில் ஆண்டார் எனவும் திருவடவாய் முக அக்கினீசுவரர் எனவும்அறிய முடிகிறது. இன்று வெடால் என அழைக்கப்படும் இவ்வூர், சோழர் காலத்தில் சோழ கேரள சதுர்வேதிமங்கலம் என பெயரிட்டு அழைக்கப்பட்டது. மேலும் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் விடால் என அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. இடைக்ழிநாட்டுக்கொன என்பவரின் மனைவி இக்கோவிலுக்கு ஆடவல்லான் திருமேனிகளை யெ்தளித்ததை அறிய முடிகிறது. மேலும் ஓய்மா நாட்டு முன்னூரைச் சேர்ந்த சோழ கேரள பெரியரையன் என்பவர் இக்கோயிலில் விளக்கு எரிப்பதற்காக நிலம் தானம் அளித்துள்ளார். இக்கோயிலில் மடம் ஒன்று இருந்ததையும் அறிய முடிகிறது. இக்கோயிலில் சித்திரை...