திருக்கோயில் ஸ்தல வரலாறு இராவணன் மகன் மேகநாதன்(அ) இந்திரஜித் என்பவரை இலங்கை யுத்தத்தில் வதம் செய்த காரணத்தினால் லெட்சுமணருக்கு பிரம்மஹத்தி சாபம் பெற்றமை காரணத்தினால் சாப நிவர்த்தி வேண்டி சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து தனது அம்பினால் தீர்த்தம் ஏற்படுத்தி தீர்த்த நீராடி அத்தீர்த்தத்தை அபிஷேகம் செய்து தனது பாப விமோசனம் அடைகிறார். இராமயண யுத்தம் நடந்த காலம் திரேதாயுகம் என்று அறியப்படுகிறது. மற்றொரு லிங்கம் திருக்கோயிலில் உள்ளது அந்த லிங்கம் துவாபர யுகத்தில் மஹாபாரத ்ரீ கிருஷ்ணனின் சகோதரர் பலராமர் பிரதிஷ்டை செய்து பூஜித்தது. காரணம் ஏனெனில் ஒரு சமயம் பலராமர் சிறு குழந்தையாக இருந்த போத அதிக குறும்பு தவறுகள் செய்த வேலையில் ்ரீ சுதர் என்ற முனிவரால் பிரம்மஹத்தி சாபம் பெற்று தன் சாபவினை...