அருள்மிகு சௌந்தர்ய அம்மன் திருக்கோயில் இராமேசுவரம், செளந்தர்ய அம்மன் ஸ்தல வரலாறு ்ரீ இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வடமேற்கில் கெந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் ்ரீ செளந்தர்ய அம்மன் கோயில் உள்ளது.அம்பாள் இங்கே குழந்தையாக காட்சி அளிக்கிறார். இது இராமேசுவரத்தில் உள்ள மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு குலதெய்வமாகவும் இஷ்டதெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள். இக்கோயிலில் காதுகுத்து மற்றும் கல்யாணங்களுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு அக்காரியம் நடந்தவுடன் பத்திரிக்கை வைத்து வழிபட்டு வருகிறார்கள். இக்கோயில் மிகவும் மகிமை வாய்ந்ததாகவும் உள்ளது. இக்கோயிலுக்கு தொன்றுத்தொட்டு வழிவழியாக பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடத்துகிறார்கள். நவராத்திரியில் அதிகமாக காப்புக்கட்டி விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தி அம்பாள் அருளுக்கு வேண்டி பல பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்வார்கள். இது மிகவும் சக்தி வாய்ந்த...