சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனையே நினைந்து நெகிழ்ந்து அன்பே நினைந்து ஊற்றெழும் கண்ணீரானால் உடம்பு நனைந்து காதலாகி கண்ணீர் மல்கி பக்தி செய்யும் மாவேலிச் சக்ரவர்த்தி என்பபார் வடக்கில் ஆண்டு கொண்டிருந்தார். கோடிமாதவங்கள் செய்து குன்றினோர் தம்மை எல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு தேடிமால் செய்த கோயிலாகிய இராமேஸ்வரத்தை தரிசனம் செய்ய எண்ணித் தனது குதிரையிலேயே புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். தினமும் முக்காலமும் இறைவனை வழிபாடு செய்யும் உத்தமராகிய சக்ரவர்த்தி ஒருநாள் இரவு ஒரு வனத்திலுள்ள மரத்தடியில் தங்கினார் கதிரவன் எழக்காலை விழிக்க புள்ளினம் ஆர்த்திட அதிகாலைப் பொழுதில் ஆண்டவனைப் பூசிக்க தொடங்கினார் சக்ரவர்த்தி மனம் வாக்கு உடலால் பூசையை ஒருங்கே செய்து கொண்டிருந்த போது பூஜைபாத்திரங்களில்...