இத்திருக்கோயில் திருமங்கலம் கொல்லம் நெடுஞ்சாலையில் இராஜபாளையத்தில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலஸ்தானத்தில் அருள்மிகு மாாியம்மன் அமா்ந்த கோலத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் காய்ச்சகாாி சன்னதி தனியாக உள்ளது. கடுங் காய்ச்சல் ஏற்பட்டவா்கள் இந்த அம்மனை வேண்டிக் கொண்டால் எளிதில் குணமாகிவிடுகிறது. ஆகையால் இச்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருவாாியாக வந்து நோ்த்திக் கடனாக காய்ச்சகாாி அம்மனுக்கு சாதம், ரசம், பருப்பு, சுண்டவத்தல், கானத்துவையல் போன்றவை படையல் செய்து வழிபட்டு வருகிறாா்கள்.