விளாத்திகுளத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மதுரை ரோட்டில் பெயின் பஜார் காலியிடாக இருந்த இடத்தில் ஊர்ப்பொதுமக்கள் திருக்கோயிலுக்காக இடஒதுக்கீடுசெய்து , அந்த இடத்தில் கற்பகவிநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர் . இந்த திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணரும் அமைந்துள்ளார் . விளாத்திகுளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வைப்பாற்று பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஒடும்பொழுது சலவை தொழிலாளி ஒருவர் துணி துவைப்பதற்காக கல் எடுத்தார் . அந்தக்கல் குழந்தை வடிவாக இருந்ததால் அதை எடுத்து வந்து பொதுமக்களிடம் காண்பித்தார் . நவநீதகிருஷ்ணசுவாமி சன்னதியாக அமைந்து விட்டது . இந்த ஸ்ரீ நவரீதகிருஷ்ணசுவாமிக்கு அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் தனியாக சன்னதி அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்கள் வழிபட்டு வருகிறார்கள்...