பிள்ளையார் அல்லது விநாயகர் சமசுகிருதம் சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி கணேஷா கேட்க உதவிதகவல், இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.2 விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.ஸ்ரீவைணவர்கள்,விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்க