இத்திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் வட்டம் குச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. திருக்கோயிலின் நுழைவாயில் தெற்கு திசையில் அமைந்துள்ளது. மூலவராக அருள்மிகு பாண்டீஸ்வரர் (சிவன்) காட்சியளிக்கிரார். அம்பிகை அருள்மிகு பத்ராட்சி அம்மன் அருள்புரிகிறார். திருக்கோயிலில் அருள்மிகு விநாயகர், அருள்மிகு நந்தீஸ்வரர், அருள்மிகு சூரியன், அருள்மிகு சந்திரன், அருள்மிகு தட்ச்சிணாமூர்த்தி, அருள்மிகு சனீஸ்வரர், நவகிரகங்கள், மற்றும் அருள்மிகு காலபைரவர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. மேலும் அருள்மிகு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை உடன் காட்சியளிகிரார். திருக்கோயிலின் உட்புறம் வன்னி மரம் உள்ளது சிறப்பம்சமாகும். திருக்கோயிலில் இருந்து தெற்கே 500 மீட்டர் தொலைவில் காவிரி ஆறு உள்ளது. திருக்கோயிலில் வருடந்தோறும் கந்த சஷ்டி திருவிழா, ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.