இந்து சமயத்தில் பஜனை என்பது பிராந்திய மொழியில் எவ்வித விதிமுறைகளும் இன்றி இசையுடன் பாடப்படும் தெய்வீக பாடல்களாகும். இது இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பாடப்படுகின்றது. குறிப்பாக வைணவ சமூகத்தில் விஷ்ணுவின் அவதாரங்களான ராமர், கிருஷ்ணர், விட்டல் மற்றும் நாராயணன் மீது அதிகமான பாடல்கள் உள்ளன.19 தென்னிந்தியாவில் தக்ஷிண பாரத சம்பிராதய பஜனை முறையை பின்பற்றுகின்றனர். இது பாடல்கள், கீர்த்தனைகள் மற்றும் நாமாவளிகள் அடங்கியதாகும். இப்பாடல்கள் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களால் பல இந்திய மொழிகளில் பல நாடுகளிலும் இசைக்கப்படுகின்றன