சேலம், செவ்வாய்பேட்டையை சார்ந்த ஆர்யவைசிய சமூகத்தின் செட்டிதர்மகர்த்தாக்கள் 15 குடும்பத்தினர் மற்றும் சமூக மகா ஜெனங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த 110 ஆண்டுகளுக்கு முன்னாள் வாசவி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மனுக்கு தேவஸ்தானம் கட்டினார்கள். இத்தேவஸ்தானத்தில் பார்வதி தேவி மறு அவதாரமான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியம்ன் ஆரியவைசிய சமூகத்தில் பிறந்து குழபெருமையை காப்பதற்காக அக்னி பிரவேசம் செய்தார். அம்பாள் உடன் சேர்ந்து ஆர்ய வைசிய சமூகத்தை சேர்ந்த 102 கோத்திரதாரர்களும் அக்னி பிரவேசம் செய்தது சிறப்பு வாய்ந்தது.