இத்திருக்கோயில் தாதகாப்பட்டி கிராமத்தில் சஞ்சீவராயன்பேட்டை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மாரியம்மன், காளியம்மன், முருகர், விநாயகர், உபக்கோயில் முனியப்பன் ஆகிய கற்சிலா விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடிமாதம் 15 நாட்கள் குண்டம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இத்திருவிழாவில் பக்தர்கள் வேண்டுதல் வைத்து பூக்குழி இறங்குவது சிறப்பான ஒன்றாகும்.