சேலத்திலிருந்து மேற்குத் திசையில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இடைப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. இடைப்பாடிக்குக் கிழக்கே மேட்டூரும், மேற்கே ஈரோடும், தெற்கே பவானியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர். இவ்வூரில் சரபங்காநதியின் கரையோரத்தில் நகரின் முதன்மைப் பகுதியில் அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மன்னர்களால் இத்திருகோயில் நிறுவப்பெற்றதாகக் கூறுகின்றனர். இத்திருகோயில் இறைவன் பெயர் பிரசன்ன நஞ்சுண்டேசுவரர் இறைவி பெயர் தேவகிரி அம்மன் என்பதாகும்