தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் நங்கவள்ளி உள்ளது. இங்கு சேலம் எடப்பாடி மெயின்ரோடு பிரிவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பிரதான வாசல் கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், மேற்கு கோபுரமும், வடக்கே சொர்க்க வாசலும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுயம்பு நரசிம்மசுவாமியாக அருள்பாலித்து வருகிறார்