தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலத்தில் இருந்து முப்பத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிலும் பழமைவாய்ந்த அமரம் அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.