இத்திருக்கோயில் சுமார் 18-ம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட அபிமான ஸ்தலம் பாடல்கள் பெறாத பல புராதான வைணவ திருக்கோயில்களில் ஒன்றாக இத்திருக்கோயில் இருந்து வருகிறது இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் சீனிவாசப்பெருமாளை ஸ்ரீ கௌசிகர் ஸ்ரீ அத்திரி ஸ்ரீ விஸ்வாமித்திரர் ஸ்ரீபரத்வாஜர் ஸ்ரீ வசிஸ்டர் ஸ்ரீ காஷியபர் ஆகிய ஏழு ரிஷிகள் வழிபட்டுஆராதித்து வந்தமையால் இத்திருத்தலம் அமைந்த இடம் ஏழு மூர் என பெயர் கொள்ளப்பட்டு இப்பெயரே எழும்பூர் என மருவியதாக அறியப்படுகிறது.