தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி உள்ளது. இங்கு சேலம்தர்மபுரி மெயின்ரோடு பிரிவில் பழமைவாய்ந்த பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.