நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொம்மசமுத்திரம் அருள்மிகு காசிவிஸ்வநார் திருக்கோயில் முதற் பராந்தக சோழன் காலத்தில் ( கி.பி. 10 நூற்றாண்டு ) காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின்படியும், கோயில் கட்டிடக் கலை அமைப்பும், சிற்ப அமைதியும் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாக கருதலாம். இத்திருக்கோயில் நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையில் இருந்து 1 கி.மீ தொலைவில் பொம்மசமுத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.