இத்திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் வட்டம் குச்சிப்பாளையம் என்ற கிராமத்தின் கிழக்கில் 200 மீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவராக அருள்மிகு செல்லாண்டியம்மன் காட்சியளிக்கிறார். திருக்கோயிலில் பரிவார தெய்வங்ளாக அருள்மிகு பெரியசாமி, அருள்மிகு மதுரைவீரன், அருள்மிகு பட்டவர் ஆகிய தெய்வங்கள் உள்ளனர். இத்திருக்கோயிலில் தூக்குதேர் தூக்கப்படுவது சிறப்பம்சமாகும்.