கோயம்புத்தூர் நகரில் புலம் பெயர் மக்களான தேவாங்க மக்களும் இன்ன பிறரும் இனிது வாழும் பகுதி சுக்கிரவாரப்பேட்டை, இதனையொட்டிப் பேரூர் செல்லும் பெருவழியும், மருதமலை செல்லும் வழியும் உள்ளன. இதன் வழியே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையும், கோவையின் முக்கிய சாலைகளும் செல்கின்றன. இவ்விடத்தில் பிள்ளைக்கனி படைத்த சிறுத்தொண்ட நாயனாரின் பெயரில் ஒரு சத்திரம் ஒன்று திகழ்ந்தது. நாயன்மார்களில் செயற்கரிய செயல் செய்த தீரர்களில் ஒருவர் சிறுத்தொண்டர். அவரது வரலாறு தமிழகம் எங்கும், அதற்கு அப்பாலும் பெருமையுடன் வியந்து போற்றப்பட்டு விளங்கியிருக்கிறது. இதற்கு சான்றாக, அவினாசி கோயிலில் அருள்புரியும் அருள்மிகு கருணாம்பிகை அம்மன் சந்நிதிக் கருவறை வெளிப்புறத்து வியாழ வரியில் சிறுத்தொண்ட நாயனார் வரலாறு முழுதும் கற்சிற்பங்களாக வடிக்கப் பட்டிருப்பதை இன்றும் காணலாம்....