தன்னை அடைந்தார்க்கு மட்டும் இன்றி மனதில் நினைத்தார்க்கும் இன்பங்களையும் நல்வாழ்வையும் அளிக்கும் பொருட்டு அருள்மிகு மந்திரகிரிவேலாயுத சுவாமி என்னும் திருப்பெயருடன் ஆறுமுகப்பெருமானாய் எழில்மிகு மேனி தாங்கி அருளும் தலம் தென்சேரிமலை என்பதாகும். இத்தலம் கொங்கு வள நாட்டில் கோவை மாவட்டம்,சூலூர் வட்டம்,சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இத்தலம் குன்றுதோறடல் என்ற சிறப்பின் படியும் ஆதிபடைவீடு என்றும் சிறப்பாக வழங்கப்படுகிறது.