இத்திருக்கோயிலில் மாதம்தோறும் ஏகாதசி 2 திருவோணம் 1 அமாவாசை மற்றும் சுக்ரவாரம் 4 ஆகிய நாட்களில் ஸ்ரீபெருமாள் மற்றும் ஸ்ரீதாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. அதற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் அதற்கு உண்டான கட்டணம் ரூ.2000 திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்கள் ஸ்ரீபெருமாள் ஸ்ரீ தாயார் திருமஞ்சனம் நடைபெறும் நாட்களில் கலந்து கொண்டு ஸ்ரீவேதநாராயணப்பெருமாள் சமேத அருள்மிகு வேதநாயகி தாயார் திருவருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.