மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 15.09.2015 அன்று முதல் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு தினசரி நற்பகல்12.30 மணியளவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகிய உணவு வகைகள்வாழை இலையில் பரிமாறப்பட்டு வருகிறது. மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.