Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு - 603001, செங்கல்பட்டு .
Arulmigu Ekambareswarar Temple, Chengalpattu - 603001, Chengalpattu District [TM001847]
×
-

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும் என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 15.09.2015-ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது. அன்னதானத்திற்கு பணம் செலுத்துவோருக்கு 80 ஜி வரிவிலக்கு இத்திருக்கோயிலிருந்து அளிக்கப்படும். அன்னதானம் அனுமதி சீட்டு 12.00 முதல் வழங்கப்படுகிறது.அன்னதானம் நண்பகல் 12.00 மணி முதல் 12.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் திட்டம் திருக்கோயில் நிதிலிருந்தும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிறந்த நாள், திருமண நாள் முதலிய நாட்கள் மீதம் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அன்னதானம் பதிவு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.