இத்திருக்கோயிலில் ஆகஸ்ட் 2002 முதல் அன்னதானத் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. அன்னதானத் திட்டம் நாள் தோறும் 50 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அருள் உள்ளம் கொண்ட இறையன்பர்கள் அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.20000/-(இருபதாயிரம் ரூபாய்) செலுத்தி (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 50 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.1,750/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (80ஜி), உண்டு.