சங்க காலத்தில் நடுநாடு என போற்றப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மலர் தலை உலகின் கண் உள்ள எல்லா உயிர்களும் உய்யும் பொருட்டு கருணையே திருவுருவாக உடைய சிவபெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நடுநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுள் சிறப்புற்று ஓங்கிய திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்திற்கு மேற்பால் ஒரு கல் தொலைவில் காவும். பூவும் நிறைந்த புள்ளினங்களும். வண்டினங்களும் இசைபாடும் இறைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது. குரங்குலாவும் குன்றுரை மணவாளா என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்தபெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.