மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 50 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில். இதற்கான திட்டச் செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்படுகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக் கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 மணி முதல் 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், ஆவணியாபுரம் - 604 504, சேத்துப்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமானவரி சட்டம் 1961-இன் பிரிவு 80ஜி-இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.