இத்திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு 50நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கப்பட்டுவரப்படுகிறது. தினசரி மதியம் 12.30 மணிக்கு இத்திருக்கோயிலுக்கு வரும் வெளியூர் சேவார்த்திகள் மற்றும் பக்தர்களுக்கு டோக்கன் முறையில் எவ்வித பாகுபாடுகளுக்கு இடம் இல்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டுவரப்படுகிறது. 50 நபர்கள் ஒரு நாள் அன்னதான திட்டத்திற்கு ரூ.1500/- மற்றும் நிரந்தர முதலீடு திட்டத்தின் கீழ் ரூ.20000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.