அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலுடன் இணைந்த சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தங்களின் பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்கள் நிறைவேறியதை முன்னிட்டு நேர்த்திக்கடனாக இத்திருக்கோயிலில் அன்னதானம் செய்கின்றனர். மேலும் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இதர தினங்களுக்காக சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் தினமும் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய ரூ.1250 மட்டும் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அலுவலத்தில் அலுவலக வேலை நேரத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களுக்கு அன்னதானம் செய்ய முன்கூட்டியே பணம் செலுத்தலாம்.