இத்திருக்கோயிலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி அன்னதானத்திட்டம் 15.08.2002-லிருந்து தினமும் நண்பகல் 12.15-க்கு செயல்படுத்தப்பட்டுவருகிறது.பக்தர்கள் உணவருந்த வசதியாக அன்னதான கூடம் ஸ்டென்லெஸ் ஸ்டீல் பென்ஞ்ச் மற்றும் டேபிள், மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.அன்னதானத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் கனிவான கவனத்திற்கு, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் நாள் 1க்கு 125 பயனாளிகளுக்கு அன்னதானம் செய்ய ரூ.4400/-ம், வெள்ளிக்கிழமைகளில் 150 பயனாளிகளுக்கு அன்னதானம் செய்ய நாள் 1க்கு ரூ.5300/-ம், அமாவாசை நாட்களில் 200 பயனாளிகளுக்கு அன்னதானம் செய்ய நாள் 1க்கு ரூ.7500/-ம் அன்னதான நன்கொடையாக வழங்கி உரிய அச்சு இரசீது பெற்றுக்கொண்டு தாங்கள் விரும்பும் நாட்களில் இத்திருக்கோயில் அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.அன்னதானத் திட்டத்தில் நிரந்தரமாக பங்கேற்க ரூ.75000/- நிரந்தர கட்டளைநிதி வரவாக செலுத்தி ஆண்டு தோறும் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் அன்னதானத்திட்டத்தில் பங்கேற்கலாம் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.அன்னதானத் திட்டத்தில் உணவருந்தும் பயனாளிகளுக்கு பொன்னி அரிசி சாதம், பருப்பு சாம்பார், ரசம், கூட்டு அல்லது பொரியல், மோர் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் ஆகியவை பரிமாறப்படுகிறது. பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பாயசம், பருப்பு வடை பரிமாறப்படுகிறது.அன்னதானத் திட்ட உணவு தயாரிக்கும் முறையானது மிகவும் உயர்தரம் மிக்கதாகவும், அனுபவமிக்க சமையலர்களை கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது.இத்திருக்கோயில் அன்னதானத்திற்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-ன் கீழ் வரி விலக்கு உண்டு.