Screen Reader Access     A-AA+
அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301, மதுரை .
Arulmigu Murugan Temple, Solaimalai Mandapam, Alagarkovil - 625301, Madurai District [TM032124]
×
-

  இத்திருக்கோயிலில் தினசரி நண்பகல் 12.00 மணியளவில் அன்னதானம் நடைபெறுகிறது. திருக்கோயிலுக்கு வருகை தரும் 100 பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/-யை திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.35,000/யை முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் ,அவர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ஆன்லைனிலும் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு