தல வரலாறு
படைவீரர்கள் போருக்கு செல்லும் முன்வெற்றியை கொடுக்கும் வீர தேவதையை வணங்கி செல்வது வழக்கம். வெற்றி பெற்றால் அவ்வீரர்களில் ஒருவர் தங்கள் தலையை அரிந்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்குவதும் வழக்கிலிருந்தது. அத்தகைய அம்மன் கோயில் இன்றும் படைவீட்டு அம்மன் என்றும் அழைக்கப்பட்டு அதுவே பேச்சு வழக்கில் படவட்டம்மன் என்று இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இத்திருக்கோயிலில் அம்மன் சிரசு, வேப்பமரத்தடியில் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய் வீற்றிருந்து வேண்டுவோருக்கு தாம் வேண்டியவரங்களை கொடுத்து அருள் புரிந்து வருகிறாள்.