தமிழ் நாட்டின் தலைநகரமாய் விளங்கும் தருமமிகு சென்னை மாநகருக்கு அருகாமையில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மிகுந்த நகரமான பாடியில் லூகாஸ் டி.வி.எஸ் நிறுவனத்திற்கு அருகில் சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலை சென்னை மத்திய (சென்ட்ரல்) ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு தெற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அடையலாம். இத்திருக்கோயில் பாடி மற்றும் பாடியை சுற்றிலும் உள்ளநகர்களில் வாழ்கின்ற மக்களின் முக்கிய பிராத்தனை தலமாகும்.