Arulmigu Thiyagaraswamy Temple, Thiruvarur - 610003, Thiruvarur District [TM014254]
×
Temple History
தல வரலாறு
திருமால் தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று விரும்பினார். குறையெல்லாம் நிறைவிக்கும் பெருமானிடம் வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார். வெயிலிலும், மழையிலும் பெரிய நீலமலை போல அசையாது நின்று கடுந்தவஞ் செய்தார். அதன் பயனாக இறைவன் திருவருட்சக்தியோடு வெளிப்பட்டார். கண்ட திருமால் துண்ணெனத் திடுக்கிட்டு இறைவா வேண்டுவோர்க்கு வேண்டுவதேயீயும் விண்ணவர் தலைவ, அடியேனும் தேவரீர் திருவருளால் உலகப் பாதுகாப்பு முதலிய எல்லா நன்மைகளையும் எய்தினேன். ஆயினும் பிள்ளையில்லாக் குறை பெரிதாயிற்று. அதனைத் தீர்க்க அழகிய புத்திர பாக்கியத்தை அருளுதல் வேண்டும் என்றார். பெருமானும் பேரருள் கூர்ந்தார். ஆனால், திருமால் இடப்பக்கத்து இருக்கின்ற உமாதேவியை வணங்கவில்லை. அதனால் உமாதேவியார் சிறிது சினங்கொண்டு இறைவன் திருவருளால் நீ புத்திரனை யெய்தினும் அவன் விதிவலியால் வலிய அழிக என்று...திருமால் தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று விரும்பினார். குறையெல்லாம் நிறைவிக்கும் பெருமானிடம் வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார். வெயிலிலும், மழையிலும் பெரிய நீலமலை போல அசையாது நின்று கடுந்தவஞ் செய்தார். அதன் பயனாக இறைவன் திருவருட்சக்தியோடு வெளிப்பட்டார். கண்ட திருமால் துண்ணெனத் திடுக்கிட்டு இறைவா வேண்டுவோர்க்கு வேண்டுவதேயீயும் விண்ணவர் தலைவ, அடியேனும் தேவரீர் திருவருளால் உலகப் பாதுகாப்பு முதலிய எல்லா நன்மைகளையும் எய்தினேன். ஆயினும் பிள்ளையில்லாக் குறை பெரிதாயிற்று. அதனைத் தீர்க்க அழகிய புத்திர பாக்கியத்தை அருளுதல் வேண்டும் என்றார். பெருமானும் பேரருள் கூர்ந்தார். ஆனால், திருமால் இடப்பக்கத்து இருக்கின்ற உமாதேவியை வணங்கவில்லை. அதனால் உமாதேவியார் சிறிது சினங்கொண்டு இறைவன் திருவருளால் நீ புத்திரனை யெய்தினும் அவன் விதிவலியால் வலிய அழிக என்று சாபங்கொடுத்துப் பின்பு பெருமானையும் அழைத்துக் கொண்டு விரைந்து மறைந்தருளினார். திருமால் கவன்று செய்வது இன்னதென்று அறியாது நிற்கையில் திருவருள் உண்ணின்று உணர்ந்த ஒரு எண்ணம் உண்டாயிற்று. அவ்வெண்ணப்படியே சிவபெருமானையும், உமா தேவியாரையும் குமாரக் கடவுளையும் ஒரே ஆசனத்தில் எழுந்தருளுவித்து ஆகம விதிப்படி அரிய பூசனை செய்து வந்தனர். பூசனைக்குகந்த பெருங்கூத்தர் விடையின்மேல் அருள் உருக்கொண்டு வெளிப்பட்டுக் காட்சியளித்தனர். திருமால் கந்தனையும், அம்மையையும், அப்பனையும் முறையே வணங்கினர். மகிழ்ந்த மஹேஸ்வரி என் சாபம் தடைபடாது. ஆனால் நின்மகன் இறைவன் நெருப்புக் கண்ணால் வெந்து பின் பிழைப்பான் என்று சாபவிடை தந்தனள் மகிழ்ந்த திருமால் இதே சோமாஸ்கந்தத் திருக்கோலத்தோடு தேவரீர் எப்பொழுதும் எழுந்தருளி இன்னருள் புரிதல் வேண்டும். இந்த உலகம் முழுதும் உய்தல் வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே இறைவர் அருள்பாலித்தனர். பின்பு திருமால் தன் நெஞ்சக் கோயிலில் அம்மூர்த்தியை நிறுவி வழிபாடாற்றி வந்தனர். திருமாலின் நெஞ்சகத்து எழுந்தருளி உச்சுவாத நிச்சுவாசித்தால் (மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலும் வெளி விடுதலும்) ஆகிய அசைவால் பெருமானும் அசைந்தாடி ஆனந்தங்கொண்டு திருமாலுக்குத் திருவருள் கரந்து விளங்கினார். இந்த நடனம் அஜபா நடனம் எனப்படும்.