தல பெருமை
ஆற்காடு நவாப் மன்னர் காலத்தில் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் என வழங்கும் இத்திருக்கோயில் இவ்வூர் ஜமீன்தாராகிய ஒரு சிவநேசரால் கட்டப்பட்டது. திருவாடுதுறை ஆதீனத்தை சார்ந்த தவத்திரு மாதவ சிவாஞான முனிவரால் குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் சோமேசர் முதுமொழி வெண்பா மற்றும் குளத்தூர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய பாமாலைகளை சூட்டி சிறப்பிக்கப்பட்டது.