அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில், சென்னை,கொளத்தூரில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுக்கு முன்னால் ஆற்காடு நவாப் மன்னர் காலத்தில் இவ்வூர் ஜமீன்தாராகிய ஒரு சிவநேசரால் கட்டப்பட்டது.இத்திருக்கோயிலுக்கு எதிரில் இரண்டு திருக்குளங்கள் உள்ளன.(சந்திரன் மற்றும் சுரியன்).இத்திருத்தலத்தில் சிவன் சந்திரனுக்கு காட்சி தந்ததாலும்,சந்திரனுக்கு சோமன் என்று பெயர் உள்ளதாலும், இத்திருக்கோயில் மூலவர் சோமநாதர் என்றும் அம்பிகை அமுதாம்பிகை என்றழைக்கப்படுகிறார்கள். இத்திருக்கோயில் சந்திரஸ்தலம் என்பதால் மனவளர்ச்சி குன்றியவர்களும் மன நிலை பாதிப்புள்ளவர்களும் இத்திருக்கோயில் மூலவரை வணங்கினால் நலம் பெறுவார்கள். சென்னையில் நவகிரக தலங்களில் இத்தலம் சந்திரனுக்குரிய தலமாக விளங்கி வருகிறது.